இது குறித்து அந்நாட்டின் முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிகா பண்டார நாயகா குமாரணதுங்க அம்மையார் கூறுகையில், அரசுத் தலைவர் தேர்தல் பல்வேறு முறைகேடுகளில் அரசு ஈடுபட வாய்ப்புள்ளது. அதனால், சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், சர்வதேச சமூகத்தின் பார்வையில் இத்தேர்தல் நடைபெற வேண்டும் என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான மதிரிபாலா சிரிசேனாவின் தேர்தல் பிரசாராம் சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. அவருக்கு அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.