• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவில் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் பரப்புரையைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை
  2014-12-17 10:18:01  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐ.எஸ். எனும் தீவிரவாத அமைப்புக்கு இந்தியாவில் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதம் தொடர்பான பரப்புரைகளை இணையத்தில் பரப்புவதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இணையத்தில் தீவிரவாதக் கருத்துகள் வெளியிட்ப்படுவதைத் தடுக்கும் வகையில் புதிய குழு ஒன்றை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.எஸ்.தீவிரவாத கருத்துகளை சுட்டுரையில் வெளியிட்ட பொறியாளர் ஒருவர் கடந்த வாரம் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040