பாகிஸ்தானின் பெஷவார் நகரிலுள்ள ஒரு பள்ளி மீதான தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு இந்தியாவிலுள்ள அனைத்து பள்ளிகளும் 17ஆம் நாள் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியுள்ளன.
இந்திய மாணவர்கள் சிலர் "குழந்தைகளைக் கொல்லக் கூடாது" என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டைகளைப் பிடித்த காட்சி உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இடம்பெற்றது. இதற்கு முன் இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும் வெளியுறவு அமைச்சர் சயிட் அக்பருடினும் இந்த தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.