சீனத் தலைமை அமைச்சர் லீகெச்சியாங், பாகிஸ்தானில் நிகழ்ந்த கடும் தாக்குதல் குறித்து, அந்நாட்டின் தலைமை அமைச்சர் நவாஸ் ஷெரிஃபுக்கு 17ஆம் நாள் ஆறுதல் செய்தி அனுப்பினார்.
பெருவாரியான மாணவர்களின் உயிரிழப்பை ஏற்படுத்திய இத்தாக்குதல் பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும், இத்தாக்குதலில் உயிரிழ்ந்தோருக்கு அஞ்சலியையும் பாகிஸ்தான் அரசு மற்றும் மக்களுக்கு ஆறுதலையும் தெரிவிப்பதாகவும் லீகெச்சியாங் அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.