• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை
  2014-12-18 11:28:39  cri எழுத்தின் அளவு:  A A A   
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவிலும் அதுபோன்ற தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்தலாம் என இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், அனைத்து மாநில அரசுகளும் உச்சகட்ட பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

பொதுப் போக்குவரத்து, பள்ளி உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா அடுத்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக இந்திய அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040