ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிஹோட்டாவில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது.
ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட்டானது 630 டன் எடை கொண்டவை. இந்த வகை ராக்கெட்டுகள் சுமார் 4 ஆயிரம் கிலோ எடையுள்ள விண்கலத்தை ஏந்திச் செல்லும் திறன் கொண்டவை. தற்போது அனுப்ப்ப்பட்டுள்ள ஆளில்லா விண்லகலத்தின் எடை 3,700 கிலோவாகும்.
ஆளில்லா விண்கலத்தில் 2 முதல் 3 பேர் தங்கும் வரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட்டின் விண்வெளி நிலைத்தன்மை மற்றும் ஆளில்லா விண்கலம் புவியின் வளிமண்டலத்துக்குள் திரும்பும்போது அதன் சிறப்பியல்புகள் குறித்தும் ஆராயவே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.