• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தான் எதிர்க்கட்சியின் முடிவு
  2014-12-18 16:12:24  cri எழுத்தின் அளவு:  A A A   
பாகிஸ்தானின் எதிர்க்கட்சியான தெஹ்ரீக்-யி-இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கான், 4 திங்கள்காலமாக நடைபெற்ற அரசுக்கு எதிரான நடவடிக்கை முடிவடைந்தது என்று 17ஆம் நாள் தெரிவித்ததாக அந்நாட்டின் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டது.

தற்போதுள்ள உள்நாட்டின் நிலைமைக்கிணங்க, எதிர்ப்பு நடவடிக்கையை முடித்துக் கொள்வதென முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இப்போது ஒற்றுமை தான் பாகிஸ்தானுக்கு மிகவும் தேவை என்று அவர் இஸ்லாமாபாத்தில் ஆதரவாளர்களிடம் கூறினார்.

பாகிஸ்தான் தலைமை அமைச்சர் நவாஸ் ஷெரிஃப் இம்ரான் கான் மேற்கொண்ட முடிவுக்கு வரவேற்பைத் தெரிவித்தார். பயங்கரவாத எதிர்ப்புக்கான நாட்டின் முயற்சிகளை இம்முடிவு வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040