• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒபாமாவின் இந்திய வருகை இருநாடுகளின் உறவை வலுப்படுத்தும்
  2015-01-23 16:57:32  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்திய குடியரசுத் தினவிழா சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கலந்து கொள்கிறார். இதற்காக 3 நாள் இந்தியாவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அவரின் இந்த பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவானது மேலும் வலுப்படும் என்று இந்திய வெளியுறுவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இந்தியாவின் பார்வையில் பாதுகாப்பு மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான சண்டை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றுக்கு அமெரிக்கா உறுதியான ஒத்துழைப்பை அளித்து வருகிறது என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040