• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெண் குழந்தை காப்பு திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார்
  2015-01-23 16:58:13  cri எழுத்தின் அளவு:  A A A   
பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவோம், அவர்களுக்கு கல்வி அளிப்போம் எனும் திட்டத்தை இந்தியாவின் வடக்கு மாநிலமான ஹரியாணாவில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

பெண் சிசுக் கொலைகளைக் தடுக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், பெண் குழந்தைகளைக் கொல்லும் உரிமை நமக்கு கிடையாது. பெற்றோர்களை கடைசிக் காலக்தில் ஆண்தான் நன்றாகப் பார்த்துக் கொள்வார் என்பது தவறான கருத்து. ஒவ்வொருவரும் தனது வீட்டுக்கு படித்த மருமகள்தான் வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால், தனது மகளுக்கு கல்வி அளிப்பதற்கு பலமுறை நாம் யோசிக்கிறோம். இந்த மனநிலையை மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்தியாவிலேயே ஹரியாணாவில்தான் பெண் குழந்தை விகிதம் மிகவும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040