• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உக்ரைன் சூழ்நிலை பற்றிய ரஷியா அரசுத் தலைவரின் கருத்து
  2015-01-24 17:09:24  cri எழுத்தின் அளவு:  A A A   
அமைதி வழிமுறை மூலம் தான், உக்ரைனின் கிழக்கு பகுதியிலுள்ள மோதல்களைத் தீர்க்கலாம். ஆனால், உக்ரைன் அதிகார வட்டாரம், கிழக்கு பகுதியில் ஆயுத ஆற்றலைத் தொடர்ந்து பயன்படுத்தி, அதிக உயிரிழப்பினை ஏற்படுத்தியுள்ளது என்று ரஷியா அரசுத் தலைவர் விளாடிமிர் புத்தின் ஜனவரி 23ஆம் நாள் தெரிவித்தார்.

உக்ரைன் அரசுப் படைகள், அரசு சாரா ஆயுதப் படைகளுடன் அண்மையில் டோனெட்ஸ்க் விமான நிலையத்தில் தீவிரமான துப்பாக்கி சண்டை நடத்தின. இரு தரப்பும் ராக்கெட்டுக் குண்டுகள், டாங்கி உள்பட பெரிய ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளன. இந்நிலையில், உக்ரைன் கிழக்குப் பகுதியின் சூழ்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040