எபோலா நோயாளி அதிகரிக்கும் வேகம் குறைந்த போதிலும், இந்நோய் கடுமையாக பரவி வரும் கினி, லைபீரியா, சியாரலியோங் ஆகிய மூன்று நாடுகளின் நிலைமை கவலை அளிப்பதாய் உள்ளது என்று உலகச் சுகாதார அமைப்பு 23ஆம் நாள் தெரிவித்தது. எனவே இந்நோய் குறித்த விழிப்புணர்வை தணிவு செய்யக் கூடாது என்றும் இவ்வமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடளவில் எபோலா நோய் மீதான முற்றுகை கட்டளையை நீக்குவதாக சியாரலியோங் அறிவித்த பிறகு உலகச் சுகாதார அமைப்பு மேற்கூறிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. எபோலா நோய் தடுப்புக்கான நிதியும் மருத்துவப் பணியாளர்களும் இன்னமும் குறைவு. எதிர் வரும் மழைக்காலம் இந்நோய் தடுப்புக்கான இன்னல்களை அதிகரிக்கும் என்றும் இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.