• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் கொரிய அரசுத் தலைவரைச் சந்தித்துரையாடிய சீனத் துணைத் தலைமையமைச்சர்
  2015-01-24 18:23:43  cri எழுத்தின் அளவு:  A A A   

தென் கொரியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள சீனத் துணைத் தலைமையமைச்சர் வாங் யாங், தென் கொரிய அரசுத் தலைவர் பாக் கெயுன்-ஹெ அம்மையரை 23-ஆம் நாள் சியோல் நகரில் சந்தித்துரையாடினார்.
வாங் யாங் கூறுகையில், இரு நாடுகளின் அரசுத் தலைவர்களின் கூட்டு கவனத்தில், சீன மற்றும் தென் கொரிய உறவில் வலுவான வளர்ச்சி போக்கு காணப்பட்டுள்ளது என்றார். மேலும், கூட்டு முயற்சிகளுடன், இரு நாடுகளுக்கிடையேயான மானிடப் பண்பாட்டியல் பரிமாற்றத்தை விரிவாக்கி, மக்களிடையேயான தொடர்பை அதிகரிக்க வேண்டும் என்றும், சீன-தென் கொரிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் வெகுவிரைவில் கையொப்பமிட வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
பாக் கெயுன்-ஹெ அம்மையர் கூறுகையில், தென் கொரியாவும் சீனாவும் பல்வேறு துறைகளில் மேற்கொண்ட பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்புகளின் அளவு ஊக்கம் மிக்கது என்றார். அதே சமயம், இரு நாட்டுப் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றும் வகையில், தென் கொரிய-சீன சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்து இரு தரப்பும் வெகுவிரைவில் ஒத்த கருத்துக்கு வர வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040