வன்முறை மூலம் உக்ரைன் நெருக்கடியைத் தீர்க்காமல் தவிர்க்கும் வகையில், உக்ரைன் அதிகார வட்டாரம் மீது அமெரிக்கா நிர்ப்பந்தம் செய்ய வேண்டும். ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் 25ஆம் நாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது இவ்வாறு தெரிவித்தார்.
மோதலில் ஈடுபட்ட உக்ரைனின் இரு தரப்பும் தோபாஸ் பகுதியில் பீரங்கிக் குண்டு தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று லாவ்ரோவும் கெர்ரியும் தெரிவித்துள்ளனர்.
பல்வகை பேச்சுவார்த்தை வழிமுறைகளைப் பயன்படுத்தி உக்ரைன் நெருக்கடிக்கான தீர்வை முன்னேற்ற வேண்டும் என்றும் கெர்ரி முன்மொழிந்தார்.