2500 டன்னுக்கும் மேற்பட்ட எஃகு ஏற்றிச் செல்லும் சிறப்பு தொடர்வண்டி ஜனவரி 23ஆம் நாள் சீனாவின் சின்ஜியாங்கிலுள்ள ஒரு சரக்கு போக்குவரத்து நிலையத்திலிருந்து புறப்பட்டது. சின்ஜியாங்கில் தயாரிக்கப்பட்ட எஃகு தொடர்வண்டி மூலம் மத்திய ஆசியா, ஐரோப்பிய நாடுகளுக்குக் கூட ஏற்றுமதி செய்யப்படுவதை இது காட்டுகிறது.
தற்போது ஒரு மாதத்துக்கு இரண்டு தொடர்வண்டிகள் மூலம் எஃகு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அடுத்த திங்கள் ஒரு வாரத்துக்கு ஒரு தொடர்வண்டி மூலம் ஏற்றுமதி செய்யப்படும். சின்ஜியாங்கிற்கும் சுற்றுப்புற நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத் தொடர்பை அதிகரிக்கும் வகையில், ஒரு வாரத்துக்கு இரண்டு தொடர்வண்டிகள் மூலம் எஃகு ஏற்றுமதி செய்யப்படும் திறன் நனவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.