நிகழ்ச்சியைக் காண திரளான மக்கள் வருகை தந்திருந்தனர்.
தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு முன் உள்ள ராஜபாதையில் ராணுவ வீரர்கள் பேரணி நடத்தி, நாட்டின் ராணுவ வலிமையை பறைசாற்றினர். இதனை ஒபாமா உற்சாகமாகக் கண்டு களித்தார்.
முதன்முறையாக இந்த ஆண்டு, முப்படைகளின் அணி வகுப்புகளையும் பெண் வீராங்கனைகள் முன்நின்று வழிநடத்திச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தினவிழாவின் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதன் முறையாகும்.