• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நான் வர்த்தக நண்பர் மட்டுமல்ல, நாட்டுப் பண்பாட்டின் இணைப்பாளரும் கூட
 
  2015-01-29 09:00:32  cri எழுத்தின் அளவு:  A A A   

இரு நாடுகளும் தங்களுக்குமிடையே உள்ள மற்ற பிரச்னைகளை ஒதுக்கி வைத்து விட்டு, அதனையும் வர்த்தகத்தையும் இணைக்காமல், வர்த்தகத்தை வளர்த்தோமேயானால், வர்த்தகத்துடன் மற்ற உறவுகளும் வளரும். முன்பு பண்பாட்டு பறிமாற்றத்தினால் வர்த்தகம் வளர்ந்தது. தற்போது வர்த்தகத்தின்மூலம் மீண்டும் கலாச்சாரத்தை வளர்க்க வேண்டிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக, வேலையின் காரணத்தால் அரூணா சீனாவின் பெரும்பாலான நகரங்களுக்குச் சென்றுள்ளார். ஒவ்வொரு நகரமும் அருக்குக்கு வேறுப்ட்ட உணர்வைத் தந்துள்ளது. அவற்றின் மூலம், சீனாவின் பாரம்பரிய பண்பாட்டையும் பழக்கவழக்கங்களையும் அவர் ஆழமாகப் புரிந்துணர்ந்துள்ளார். துவக்கத்தில் அவர் வர்த்தகம் மட்டும் நடத்த விரும்பினார். இப்போது, இரு நாடுகளின் பண்பாட்டு உணர்ச்சியை முன்னோடுக்க விரும்புகிறார். அவர் பல நாடுகளுக்குச் சென்ற போதிலும், சீனாவை மிகவும் விரும்புகிறார். சீனப் பண்பாட்டிலும் இந்தியப் பண்பாட்டிலும் பல ஒற்றுமைகள் உள்ளன. மேலும் முக்கியமானது, சீனாவால் தான், ஷாவ் லின் மற்றும் சீனப் புத்த மதத்தின் மூதாதையர் போதிதர்மனுக்கும் அவருக்குமிடையில் தொடர்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது பற்றி அரூணா கூறியதாவது:

நான் போதிதர்மனுடனான இணைப்பு என்பது, சீனாவுடனான இணைப்பாகும். சீனாவுக்கு தொடக்கத்தில் வந்தபோது, போதிதர்மன் பற்றி அதிகம் அறிந்து கொள்ள இல்லை. ஆனால், குழந்தை காலத்தின்போது, ஷாவ் லின் பற்றிய திரைப்படங்களைக் காண மிகவும் விரும்பினேன். சீனாவின் குங்ஃபூவில் அதிக ஆர்வம் அடைந்தேன். அதனால், ஷாவ் லின் கோயிலுக்கு சில முறை சென்றேன். போதிதர்மன் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்று அங்குள்ள முதன்மை துறவி என்னிடம் கூறினார். அதனால், போதிதர்மனை அறிந்துகொள்ள விரும்பினேன். வர்த்தகத்தை நீண்ட காலமாக நடத்தியுள்ளேன். இப்போது சீன-இந்தியப் பண்பாட்டுக்குப் பங்களிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இருநாடுகளுக்கிடையேயான பண்பாட்டுப் பரிமாற்றம் நன்றாக இருந்தால், பிரச்சினைகள் நிலவாது. என்று அரூணா சொன்னார்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040