இப்போது, போதிதர்மன் சங்கத்தின் தலைமைச் செயலாளரார அரூணா விளங்குகிறார். சீன-இந்தியப் பண்பாட்டை பரவல் செய்வதற்காக இந்த அமைப்பு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அரூணாவைப் பொருத்தவரை, சீனா அவரின் இரண்டாவது ஊராகும். அவரை திரு சீனா என்று அவரின் சீன நண்பர்கள் அன்பாக அமைக்கிறார்கள். அவரின் கருத்தில், சீன மக்களும் இந்திய மக்களும் அண்டை வீட்டுக்காரராவார்கள். அண்டை வீட்டுக்கார்ர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும். உதவிகளை அளிக்கவும் வேண்டும். இரு நாட்டுறவின் நட்பு மற்றும் நிதானம் அவரின் மிகப் பெரிய விருப்பமாகும்.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவு சுமார் 2-3 ஆயிரம் ஆண்டுகளை கொண்ட உறவாகும். வர்த்தகம் மட்டுமில்லாமல், பண்பாடு மற்றும் பௌத்த மதம் மூலம் இரு நாடுகளின் உறவும் வலுவடைந்துள்ளது. குறிப்பாக பௌத்த மதமானது இந்தியாவிலிருந்து சீனாவுக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு பலரும் முயற்சி செய்துள்ளனர். ஹெனான் மாநிலத்தில் அமைத்து பைமாஸ் எனும் வெள்ளைக் குதிரை கோயிலில்தான் முதன்முதலாக பௌத்த மதம் பரப்பியது. தொடர்ந்து, நாளாந்தா பல்கலைக்கழத்தில் உலகம் முழுவதும் இருந்து வந்து படித்திருக்கிறார்கள். குறிப்பாக சீனாவைச் சேர்ந்த மாணவர்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நாளாந்தாவில் கல்வி பயின்றுள்ளனர். இந்த பண்பாட்டுப் பறிமாற்றம் தற்போது குறைந்துள்ளது. முன்பு இருந்த அளவுக்கு இல்லை. அனைவரும் வர்த்தகம் மற்றும் பணத்தைத் தேடிச் சென்றதால், பண்பாடு பறிமாற்றம் குறைந்து வர்த்தகம் அதிகரித்துள்ளது. அக்குறையைப் போக்கும் நோக்கில் இந்த போதி தர்மா விஷினரி டிரஸ்ட் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.