இஸ்ரேல், சிரியாவுடனும் லெபனானுடனும் எல்லை பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடத்தி உயிரிழப்பை ஏற்படுத்தியதால், இஸ்ரேல்-சிரியா நிலைமையும் இஸ்ரேல்-லெபனான் நிலைமையும் பதற்றமாகி வருகின்றன. இது குறித்து சீனா கவனம் செலுத்தி, மோதலில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு மன வருத்தம் தெரிவிக்கிறது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் அம்மையார் 29ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இதைக் கூறினார்.
இது தொடர்பான பல்வேறு தரப்புகள் இயன்ற அளவில் முயற்சி மேற்கொண்டு கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, மோதல் மோசமாகாமல் தவிர்க்க வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்தார்.