சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டித் தலைவர் ச்சாங்துஜியாங் பாகிஸ்தான் தேசிய பேரவைத் தலைவர் சார்தார் அயாஸ் சாட்டிகுடன் 29ஆம் நாள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சீன-பாகிஸ்தான் நட்புறவில் சீனா பெரும் கவனம் செலுத்தி வருகிறது. பாகிஸ்தானுடனான நட்புறவை வளர்ப்பது சீனாவின் தூதாண்மைக் கொள்கையில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகும். பாகிஸ்தானின் எரியாற்றல், அடிப்படை வசதிக் கட்டுமானம் முதலிய துறைகளில் சீன நிறுவனங்கள் ஆக்கப்பூர்வமாகப் பங்கேற்பதைச் சீனா ஊக்குவித்துள்ளதாக ச்சாங்துஜியாங் தெரிவித்தார்.
பயங்கரவாத எதிர்ப்பில் சீனாவின் முயற்சிகளைப் பாகிஸ்தான் வெகுவாகப் பாராட்டியுள்ளது. பாகிஸ்தான் சீனாவுடன் இணைந்து பிரதேசத்தின் அமைதி, நிதானம், பாதுகாப்பைப் கூட்டாகப் பேணிக்காக்க விரும்புவதாக சாட்டிக் கூறினார்.