50 ஆண்டுகளுக்கு முன், சீனாவும் பிரான்ஸும், தூதாண்மை உறவை நிறுவி, இரு நாட்டு உறவின் புதிய பக்கத்தைத் திறந்து வைத்துள்ளன. கடந்த 50 ஆண்டுகளாக, இரு நாட்டுறவின் வளர்ச்சி, நாடுகளுக்கிடையிலான பரிமாற்றத்துக்கு முன்மாதிரியாக திகழ்கிறது என்று லீகெச்சியாங் தெரிவித்தார்.
நாகரிகச் சிறப்பு வாய்ந்த பெரிய நாடுகளாக, சீனாவும் பிரான்ஸும் திகழ்கின்றன. மேலும் பரந்த உலகப் பார்வையிலும், புத்தாக்க எழுச்சியிலும், இரு நாட்டு நட்புறவின் புதிய அத்தியாயத்தை எழுதக் கூட்டாக முயற்சி எடுக்க வேண்டும். இதன் மூலம், மனிதகுல நாகரிகம் இடைவிடாமல் வளர்ந்து, சர்வதேச அமைதியைப் பேணிக்காப்பதற்கு புதிய பங்கு ஆற்றும் என்றும் லீகெச்சியாங் சுட்டிக்காட்டினார்.