2014ஆம் ஆண்டின் மார்ச் திங்கள், உக்ரேன் நெருக்கடி தீவிரமாகிய பின், ரஷியா மீது மேலை நாடுகள் பல சுற்று பொருளாதார தடை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதன் விளைவாக, ரஷியாவிலிருந்து மூலதனம் வெளியேறியது. ரஷிய நாணயம் தொடர்ந்து மதிப்பிறங்கி, பண வீக்கம் தீவிரமாகியது. இதனிடையில் பொருளாதார வீழ்ச்சியைத் தடை செய்து, பொருட்களின் விலையை நிதானப்படுத்தும் வகையில், 30ஆம் நாள், ரஷிய மத்திய வங்கி, வட்டி விகிதத்தை 17 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடாகக் குறைக்கத் தீர்மானித்துள்ளது.