அண்மையில் நடைபெற்ற ஈரான் அணு ஆற்றல் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை பற்றியும் இப்பேச்சுவார்த்தையின் எதிர்காலம் பற்றியும் ஹோங் லெய் அறிமுகம் செய்தார். கடந்த 22ஆம் நாள் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தை முன்னேற்றம் அடைந்துள்ளது. அத்துடன் கருத்துவேற்றுமையும் நிலவுகிறது. புதிய சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறவுள்ளது. பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, இப்பேச்சுவார்த்தையை முன்னேற்றுவதற்குச் செயலாக்க பங்காற்ற சீனா விரும்புகிறது என்று அவர் கூறினார்.