தகவல் தொழில் நுட்பத்தின் மேம்பாட்டைப் பயன்படுத்தி, ஒற்று மென் பொருளைப் பொருத்துதல் உள்ளிட்ட முறைகளில், இணையத்தைக் கண்காணித்து கட்டுபடுத்தும் செயலை சீனா அரசு உறுதியாக எதிர்க்கின்றது. சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் ஹோங் லெய் 25ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் இதைத் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் உளவு நிறுவனங்கள் நெதர்லாந்தில் உள்ள கைப்பேசி சிம் அட்டை தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் கணிணி முறைமையில் ஒற்று மென்பொருளைப் பொருத்தியுள்ளது என்றும், சில சீன கூட்டு நிறுவனங்கள் பயன்படுத்தும் சிம் அட்டைகள், இந்நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்று செய்தி வெளியிட்டது. இது பற்றி செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த போது ஹோங் லெய் இதைத் தெரிவித்தார்.