ஐ.நாவின் ஆசிய பசிபிக் பொருளாதார சமூக ஆணையம் 25ஆம் நாள் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, 2014ஆம் ஆண்டு, உலகளவில் மொத்தமாக 226 பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் 119 பேரழிவுகள் ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் நிகழ்ந்தன. பொருளாதார இழப்பு 5960 கோடி அமெரிக்க டாலரை எட்டியது.
2014ஆம் ஆண்டில் உலகில் நிகழ்ந்த கடுமையான இயற்கை பேரழிவு, இந்தியாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் ஹத்ஹத் சூறாவளி தான். இது தொடர்புடைய பொருளாதார இழப்பு, 1600 கோடி மற்றும் 1100 கோடி அமெரிக்க டாலராகும். அதையடுத்து, சீனாவின் யுன்னான் மாநிலத்தின் லூதியான் நிலநடுக்கம், ஜப்பானின் வெட்ப மண்டல புயல் காற்று ஆகியவை இடம்பெறுவதாக இவ்வறிக்கை தெரிவித்தது.