கூடுதலான தடை நடவடிக்கைகளை ஈரான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று ஈரான் அரசுத் தலைவர் ஹசான் ருஹனி 25ஆம் நாள் தெரிவித்தார்.
அந்நாட்டிலுள்ள குமும் நகருக்கு பணி பயணம் மேற்கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது, ஈரான் மீதான சர்வதேச தடை நடவடிக்கைகள், மனித உரிமையை மீறுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
23ஆம் நாள் முடிவடைந்துள்ள புதிய சுற்று ஈரான்-அமெரிக்க இரு தரப்புப் பேச்சுவார்த்தையில், ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை குறித்த குறிப்பிட்ட பயனுள்ள முன்னேற்றமடைந்துள்ளது என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் ஷலிஃப 24ஆம் நாள் ஈராக்கின் தலைநகர் பாக்தாதில் தெரிவித்தார்.