லீகெச்சியாங் பேசுகையில், இலங்கையுடன் உறவை வளர்ப்பதற்கு சீன அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இலங்கை மக்கள் நாட்டின் நிலைமைக்குப் பொருத்த வளர்ச்சிப் பாதையைத் தெரிவு செய்வதற்கும் மதிப்பளிக்கிறது. இலங்கையுடன் இணைந்து இருநாடுகளின் மக்களுக்கு நன்மை பயக்க சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.
சமராவேரா கூறுகையில், சீனா மீதான நட்பார்ந்த கொள்கையை இலங்கையின் இரு அரசியல் கட்சிகளும் பின்பற்றுகின்றன. சீனாவுடன் இணைந்து பல்வேறு துறைகளிலும் இருநாடுகளின் ஒத்துழைப்புகளை புதிய நிலைக்கு உயர்த்த இலங்கை விரும்புகிறது என்று கூறினார்.