இலங்கை, "21வது நூற்றாண்டு கடல் வழிப் பட்டுப் பாதையில்" ஒளிவீசும் முத்தாக மாறும் என சீனா எதிர்பார்க்கின்றது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ 27ஆம் நாள் பெய்சிங்கில் இலங்கை வெளியுறவு அமைச்சர் சமராவேராவுடன் கூட்டாக நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இதைத் தெரிவித்தார்.
இதர நாடுகளுடன் 21வது நூற்றாண்டு கடல் வழிப் பட்டுப்பாதையை கூட்டாக உருவாக்குவது பற்றி சீனா முன்வைத்த முன்மொழிவு, இலங்கையின் வளர்ச்சி நெடுநோக்கு திட்டத்துடன் பெரிதும் பொருந்தியதாக இருக்கின்றது. சீன-இலங்கை ஒத்துழைப்பு, புதிய காலக் கட்டத்தில் கடல் துறை ஒத்துழைப்புக்கு மாதிரியாக மாறும் என சீனா நம்புவதாக வாங் யீ தெரிவித்தார்.
சீன-இலங்கை-இந்திய உறவு குறித்து வாங் யீ பேசுகையில், முத்தரப்பு ஒத்துழைப்பு பற்றி திறந்த மனப்பான்மை காட்டி, முத்தரப்பு ஒத்துழைப்பின் துறைகள் மற்றும் வழிமுறைகள் பற்றி விவாதிக்க சீனா விரும்புகின்றது என்றார்.
சீன-இலங்கை உறவு, சீன-இந்திய உறவு சீராக வளர்ச்சியடைய வேண்டும் எனவும், இலங்கை-இந்திய உறவு தொடர்ந்து வளர்ச்சியடைய வேண்டும் எனவும் சீனா விரும்புவதாக வாங் யீ குறிப்பிட்டார்.