• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் முதலீட்டை வரவேற்கிறது இலங்கை
  2015-03-01 16:34:18  cri எழுத்தின் அளவு:  A A A   
வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான முதலீட்டுச் சூழலை இலங்கை அரசு உருவாக்கி வருகிறது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சமராவேரா 28ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். மேலதிக முதலீட்டாளர்கள், இலங்கையில் பயனடைய விரும்புவதாகவும், குறிப்பாக, சீன முதலீட்டாளர்கள் இலங்கைக்குச் சென்று முதலீடு செய்வதை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் புதிய அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தூண்டும் வகையில், சர்வதேச சமூகத்துடன் ஒன்றிணையும் சூழலை அமைக்க அரசு முயற்சி செய்து வருகிறது என்று சமராவேரா கூறினார். மார்ச் 26, 27, 28ஆம் நாட்களில் இலங்கை அரசுத் தலைவர் மைத்ரிபாலா சிரிசேனா சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார். அவரது இப்பயணத்துக்கு தயார் செய்வது, சமராவேராவின் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் ஆகும். சிரிசேனாவின் பயணத்தின் போது, சீனாவின் ஹைநான் மாநிலத்துக்குச் சென்று, போ ஆவ் கருத்தரங்கில் கலந்து கொள்வார் என்று சமராவேரா கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040