இலங்கையில் புதிய அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தூண்டும் வகையில், சர்வதேச சமூகத்துடன் ஒன்றிணையும் சூழலை அமைக்க அரசு முயற்சி செய்து வருகிறது என்று சமராவேரா கூறினார். மார்ச் 26, 27, 28ஆம் நாட்களில் இலங்கை அரசுத் தலைவர் மைத்ரிபாலா சிரிசேனா சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார். அவரது இப்பயணத்துக்கு தயார் செய்வது, சமராவேராவின் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் ஆகும். சிரிசேனாவின் பயணத்தின் போது, சீனாவின் ஹைநான் மாநிலத்துக்குச் சென்று, போ ஆவ் கருத்தரங்கில் கலந்து கொள்வார் என்று சமராவேரா கூறினார்.