• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஓவியர் சாவ் சிங் அம்மையார்
  2015-03-18 15:52:33  cri எழுத்தின் அளவு:  A A A   

கலை மூலம், இரு நாடுகளுக்கிடை நட்பார்ந்த பரிமாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றும், மக்களின் மனங்களிடை தொடர்பு இதுவாகும் என்றும் சாவ் சிங் அம்மையார் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"அடுத்த ஆண்டு பிப்ரவரி திங்கள் ஜப்பானுக்கு வருவேன். ஜப்பான் ஓவியங்களில் கீழை நாட்டுத் தனிச்சிறப்பு மிக்கவை. இந்த ஓவியங்களிலிருந்து பலவற்றை நன்றாக கற்றுக்கொள்ள வேண்டும். ஜப்பானின் ஃபுஜியாமா மலையும், சாகுரா மலரும் மிகவும் அழகானவை. இனிமேல், ஓவியங்களில் இவற்றை கருப்பொருளாக வரைய விரும்புகிறேன்" என்றார் அவர்.

சாவ் சிங் அம்மையாரின் ஓவியப் படைப்புகள் வண்ணமயமானவை. உயிராற்றல் மிக்கவை. கலை உள்ளடக்கம் பற்றியும், அடுத்த தலைமுறையினர் மீதான ஆசை பற்றியும் சாவ் சிங் அம்மையார், தமது தந்தை அதாவது சீனாவின் புகழ் பெற்ற அரங்கேற்றக் கலைஞர் சாவ் டனின் கூற்றை மேற்கோள் காட்டி, கலை பற்றிய புரிந்துணர்வைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:  

"கலைஞராக, ஒருவர், எந்த நேரத்தில் மக்களுக்கு உண்மை, அழகு மற்றும் இன்பம் தர வேண்டும். கலைஞர்கள் கலை மூலம் அழகு மற்றும் நம்பிக்கை உணர வேண்டும். ஒவ்வொரு ஓவியமும், அல்லது ஒவ்வொரு கலைப் படைப்பும், மக்களுக்கு உண்மை, இரக்கம், அழகு ஆகியவற்றைத் தர வேண்டும் என்று என் தந்தை கூறினார்" என்றார் அவர்.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040