தென் கொரியா-அமெரிக்கக் கூட்டுத் தலைமையகமும், தென் கொரியப் படை தலைமைப் பகுதியும், பெரிய கூட்டு இராணுவப் பயிற்சியை மார்ச் 2ஆம் நாள் தென் கொரியாவில் அதிகாரப்பூர்வமாகத் துவக்கின. 3 ஆயிரத்து 700க்கு மேலான அமெரிக்கப் படையினர்களும், 2 லட்சத்துக்கு மேலான தென் கொரிய படையினர்களும் இப்பயிற்சியில் கலந்து கொண்டு வருகின்றனர். இப்பயிற்சி ஏப்ரல் 24ஆம் நாள் நிறைவடையும்.
இந்நிலையில், வட கொரியா, கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடல் பரப்பு மீது, 2ஆம் நாள் 2 ஏவுகணைகளை வீசியது. கூட்டு இராணுவப் பயிற்சி மீதான எதிர்ப்பாக இது திகழக்கூடும் என்று தென் கொரியாவின் தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.