• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் கொரியா-அமெரிக்கக் கூட்டு இராணுவப் பயிற்சி பற்றிய வட கொரியாவின் கருத்து
  2015-03-04 09:26:04  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்காவும் தென் கொரியாவும் நடத்தி வருகின்ற கூட்டு இராணுவப் பயிற்சி, கடும் கண்டனத்திற்கு உரியது. இது போர்களை ஏற்படுத்தக்கூடும் என்று வட கொரியாவின் வெளியுறவு அமைச்சர் லீ ச்சுயூங் மார்ச் 3ஆம் நாள் ஜெனீவாவில் நடைபெற்ற படைகலக்குறைப்பு பேச்சுவார்த்தையில் தெரிவித்தார்.

தென் கொரியா-அமெரிக்கக் கூட்டுத் தலைமையகமும், தென் கொரியப் படை தலைமைப் பகுதியும், பெரிய கூட்டு இராணுவப் பயிற்சியை மார்ச் 2ஆம் நாள் தென் கொரியாவில் அதிகாரப்பூர்வமாகத் துவக்கின. 3 ஆயிரத்து 700க்கு மேலான அமெரிக்கப் படையினர்களும், 2 லட்சத்துக்கு மேலான தென் கொரிய படையினர்களும் இப்பயிற்சியில் கலந்து கொண்டு வருகின்றனர். இப்பயிற்சி ஏப்ரல் 24ஆம் நாள் நிறைவடையும்.

இந்நிலையில், வட கொரியா, கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடல் பரப்பு மீது, 2ஆம் நாள் 2 ஏவுகணைகளை வீசியது. கூட்டு இராணுவப் பயிற்சி மீதான எதிர்ப்பாக இது திகழக்கூடும் என்று தென் கொரியாவின் தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040