மார்ச் 2ஆம் நாள் துவங்கிய உலகச் செல்லிடத் தகவல் தொடர்பு மாநாட்டில் உலகச் செல்லிடத் தகவல் தொடர்பு அமைப்பு முறை சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 2020ஆம் ஆண்டுக்குள் உலகளவில் செல்லிடப்பேசி பயன்பாட்டாளர் எண்ணிக்கை 2014ஆம் ஆண்டின் இறுதியில் இருந்த 360 கோடியிலிருந்து 460 கோடியாக அதிகரிக்கும். அப்போது உலகிலுள்ள 60 விழுக்காட்டினர் செல்லிடத் தகவல் தொடர்பு சேவையைப் பயன்படுத்துவர் என்று இவ்வறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் முக்கியமாக வளரும் நாடுகளில் செல்லிடப்பேசி பயன்பாட்டாளர் அதிகரிப்பு உயர்ந்து காணப்படும். 2014ஆம் ஆண்டு செல்லிடத் தகவல் தொடர்பு துறை உலகப் பொருளாதாரத்தில் 3 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள அளவிற்குப் பங்காற்றியுள்ளது. உலக மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இது 3.8 விழுக்காடு வகிக்கிறது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.