சீனாவின் ஆடு ஆண்டை வரவேற்கும் வகையில், இந்தியாவின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சீன மொழிப் பிரிவு மார்ச் 4ஆம் நாள், வசந்த விழா பற்றிய கலை நிகழ்ச்சியை நடத்தியது. இப்பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், சீனப் பாடல்கள், சிறுகதைகள், இந்திய நடனங்கள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கினர். இந்தியாவுக்கான சீனத் தூதர் லெ யூச்செங் இந்நடவடிக்கையில் பங்கெடுத்தார்.