ஸ்பெயினின் பார்சிலோனாயிலிருந்து ஜெர்மனியின் டுஸ்ஸல்டார்ப்க்குக் பயணமான போது, ஏ 320 ரக பயணியர் விமானம் ஒன்று, மார்ச் திங்கள் 24ஆம் நாள் பிரான்ஸின் தெற்குப் பகுதியிலுள்ள ப்ரோவின்ஸ் ஆல்பஸ் மலைப் பிரதேசத்தில் வீழ்ந்து நொறுங்கியது. இவ்விமானத்தில் பயணித்த 150 பேர் உயிருடன் தப்பியிருக்க வாய்ப்பில்லை. இவர்களில் 144 பயணிகளும் 6 விமான பணியாளர்களும் இருந்தனர். 144 பயணிகளில் இரண்டு குழந்தைகளும் 16 மாணவர்களும் அடங்கியுள்ளனர். ஜெர்மனி குடியுரிமையைச் சேர்ந்த 67 குடிமக்கள் இவ்விமானத்தில் இருந்தனர் என்று ஜெர்மன் விங்ஸ் விமானப்பயண சேவை கூட்டு நிறுவனத்தின் தலைவர் தாமஸ் விங்கில்மேன் மார்ச் திங்கள் 24ஆம் நாள் கூறினார்.