• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய-பசிபிக் நாடுகளை இணைக்கும் போ ஆவ் கருத்தரங்கு
  2015-03-25 15:49:03  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆசியாவுக்கான 2015ஆம் ஆண்டு போ ஆவ் மன்றக் கூட்டமானது, ஆசிய நாடுகள் மட்டுமல்லாமல் பசிபிக் பிரதேச நாடுகளையும் ஒன்றிணைக்கும் எனக் கருதப்படுகிறது.

இந்தக் கூட்டத்தை சீனா நடத்துகிறது. சீனாவின் போ ஆவ் நகரில் இக்கூட்டம் வரும் 26ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இலங்கை, நேபாளம், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளின் அரசுத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

நடப்பு கூட்டத்தின் தலைப்பு "பொது சமூகத்தை நோக்கிச் செல்லும் ஆசியாவின் புதிய எதிர்காலம்" என பெயரிடப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை ஊக்குவிப்பது, தொழிற்சாலைகளின் உருமாற்றம், பிரதேச வளர்ச்சி, புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, அரசியல், பாதுகாப்பு, மக்களின் வாழ்வாதார நிலை உள்ளிட்டன குறித்து 70-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள் நடைபெறும் என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் ஆசியாவின் வளர்ச்சி குறித்து, ஆசிய நாடுகள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ள உள்ளன.

இது குறித்து இந்திய நிபுணர் நாலபத் கூறுகையில், ஆசியா வளர்ச்சி அடையாமல், சீனாவின் வளர்ச்சி சாத்தியமாகாது. ஆசியாவின் வளர்ச்சிக்கும் பிற ஆசிய நாடுகளின் வளர்ச்சிக்கும் சீனா முக்கியமாகும் என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040