சீனக் கடற்படைத் தலைவர் வூ ஷெங்லி 25ஆம் நாள் பெய்ஜிங்கில் பாகிஸ்தான் கடற்படை தலைவர் முகமது ச்சகோலாவை சந்தித்துப் பேசினார்.
சந்திப்பின் போது வூ ஷெங்லி கூறுகையில், சீனா மற்றும் பாகிஸ்தானின் கடற்படைப்பிரிவுகள் நெருங்கிய தொடர்பையும் நட்புறவையும் நிலைநிறுத்தி வருகின்றன. 2007ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் கடற்படை ஏற்பாடு செய்த கடற்பரப்பிலான பன்னாட்டு இராணுவப் பயிற்சியில் சீனா 4 முறை கலந்து கொண்டுள்ளது. கடற்பரப்பில் பயங்கரவாத எதிர்ப்பு, மனித நேய மீட்புதவி உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, இருதரப்பு கடற்படைப்பிரிவுகளின் கூட்டு செயல்திறனை உயர்த்த வேண்டும் என்று தெரிவித்தார்.
முகமது ச்சகோலா பேசுகையில், இருநாடுகளின் கடற்படைப்பிரிவுகளுக்கு இடையேயான ஒத்துழைப்புறவானது தொடர்ந்து வளர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.