இஸ்ரேல் அரசுத் தலைவர் ரிவ்லின் மார்ச் 25ஆம் நாள் தற்போதைய தலைமையமைச்சர் நெதன்யாஹுவிற்கு ஆட்சியமைக்கும் அதிகாரத்தை அதிகாரப்பூர்வமாக வழங்கினார்.
புதிய அரசு, மிக நெருங்கிய கூட்டணி நாடான அமெரிக்காவுடனான உறவை மீண்டும் கட்டியமைத்தல், தேர்தலால் ஏற்பட்ட குடிமக்களுக்கு இடையேயான கருத்து வேற்றுமையை நீக்குதல், நிலையான அரசின் மீது குடிமக்களின் நம்பிக்கையை உருவாக்குதல் மீண்டும் உள்ளிட்ட மூன்று முக்கிய அறைகூவல்களை எதிர்கொண்டுள்ளதாக அரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற புதிய அரசின் பதவியேற்பு விழாவில் ரிவ்லின் குறிப்பிட்டார்.