• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சாலாஹுதின் மாநிலத்தில் ஈராக் படையின் ராணுவ நடவடிக்கை
  2015-03-26 14:20:34  cri எழுத்தின் அளவு:  A A A   

ஈராக் மத்திய மற்றும் வட பகுதியிலுள்ள சலாஹுதின் மாநிலத்தில் ஈராக் படையின் பெருமளவு ராணுவ நடவடிக்கை, இறுதி காலக் கட்டத்தில் நுழைந்துள்ளது என்று ஈராக் தலைமையமைச்சர் ஹைதர் அல் அபாத் 25ஆம் நாளிரவு தெரிவித்தார்.

தவிர, ஈராக் ராணுவ விமானம், ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான சர்வதேச கூட்டணியின் ராணுவ விமானத்தின் ஒத்துழைப்புடன், இம்மாநிலத்தின் தலைநகர் திக்ரிதி நகரின் கிழக்குப் பகுதி மீது வன்மையான வான் தாக்குதல் நடத்தியது. ஐ எஸ் அமைப்பின் பல ஆயுதக் கிடங்குகளும், சீருந்துகளும் அழித்தொழிக்கப்பட்டுள்ளன. இவ்வமைப்பின் ஆயுததாரிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். சலாஹுதின் மாநிலத்தின் நாடாளுமன்றப் பாதுகாப்பு கமிட்டியின் பொறுப்பாளர் ஒருவர் இதைத் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040