பிரான்ஸ் அரசுத் தலைவர் பிரான்சோவா ஓலான்தோ, ஜெர்மனி தலைமை அமைச்சர் ஏஞ்செலா மெர்கல் அம்மையார், ஸ்பெயின் தலைமை அமைச்சர் மலியானொ ராஜுய் ஆகியோர் ஜெர்மன் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகிய இடத்திற்கு 25ஆம் நாள் சென்றடைந்தனர். மீட்புப் பணி பற்றி உள்ளூர் அரசு அலுவலர்கள் வழங்கிய அறிக்கையை அவர்கள் கேட்டறிந்தனர்.
கண்டுபிடிக்கப்பட்ட இவ்விமானத்திலுள்ள ஒரு கறுப்புப் பெட்டியின் ஒலி தரவுகளைப் பெற்று ஆராய்ந்து வருவதாக பிரான்ஸ் தேசிய பயணியர் விமான பாதுகாப்பு புலனாய்வு ஆணையத்தின் தலைவர் புதன்கிழமை பாரிஸில் தெரிவித்தார். இக்கறுப்புப்பெட்டியின் வெளிப்புறம் சேதமடைதுள்ளது.