சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றினார். அர்மேனிய அரசுத் தலைவர், ஆஸ்திரியா, இந்தோனேசியா, நேபாளம், இலங்கை, யுகாண்டா முதலிய நாடுகளின் அரசுத் தலைவர்கள், ஆஸ்திரேலியா தலைமை ஆளுநர், கஜகஸ்தான், நெதர்லாந்து, கத்தார், ஸ்வீட்டன் முதலிய நாடுகளின் தலைமை அமைச்சர்கள், ரஷிய துணைத் தலைமை அமைச்சர், தாய்லாந்து துணை தலைமை அமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
ஒட்டுமொத்த பொருளாதாரம், பிரதேச ஒத்துழைப்பு, தொழில்துறை மாற்றம், தொழில் நுட்பப் புத்தாக்கம், அரசியல் பாதுகாப்பு, மக்கள் வாழ்க்கை ஆகிய துறைகள் தொடர்பாக, 77 அதிகாரப்பூர்வ கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. பிரதேச ஒத்துழைப்பு நடப்புக் கூட்டத்தில் கவனத்தை ஈர்க்கும் அம்சமாகும். ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை, ஆசியான் பொதுச் சமூகம் ஆகியவை குறித்து விவாதம் நடத்தப்படும்.
வேளாண்மை, நீதிச் சட்டம், மதம் ஆகிய மூன்று அம்சங்கள் போ ஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் சேர்க்கப்படுவது இதுவே முதன்முறை. நீதிச் சட்டத் துறையில், சீன உச்ச மக்கள் நீதிமன்றத் தலைவர், இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளின் நீதிபதிகளுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் பற்றி விவாதம் நடத்துவது குறிப்பிடத்தக்கது.