• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஈரான் அணு ஆற்றல் பிரச்சினைக்கான கட்டுக்கோப்பு உடன்படிக்கை உருவாக்கும் முயற்சி
  2015-03-27 09:26:22  cri எழுத்தின் அளவு:  A A A   
ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் ஆறு நாடுள் 26ஆம் நாள் ஸ்விட்சர்லாந்தின் லாசன்னேயில் ஒன்றுகூடியுள்ளன. மார்ச் திங்களுக்குள் கட்டுக்கோப்பு உடன்படிக்கையை உருவாக்க ஆறு நாடுகளும் இணைந்து இறுதி முயற்சியை மேற்கொண்டுள்ளன.

26ஆம் நாள் காலை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கேரி ஈரான் வெளியுறவு அமைச்சர் முஹமது ஜாவாத் ஷெரிஃபுடன் இரண்டரை மணிநேர பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்க எரியாற்றல் அமைச்சர் எர்னெஸ்ட் மோனிஸ், ஈரான் அணு ஆற்றல் நிறுவனத்தின் தலைவர் அலி அக்பர் சாரேஹ், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி முதலியோரும் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இதையடுத்து, இந்த ஆறு நாடுகளின் பிற பிரதிநிதிகள் இரு தரப்பு மற்றும் பல தரப்புப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கவுள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040