• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவில் தற்கால சீனச் சிறந்த கை எழுத்து, ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சி துவக்கம்
  2015-03-27 09:41:57  cri எழுத்தின் அளவு:  A A A   
தற்கால சீனச் சிறந்த கை எழுத்து, ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சி 26ஆம் நாள் இந்தியாவின் புதுதில்லியில் துவங்கியது. இதில் சீனா மற்றும் இந்தியாவிலிருந்து அரசியல், பண்பாடு, கலை, செய்தி ஊடகத் துறைகளைச் சேர்ந்த 200பேர் இக்கண்காட்சியில் பங்கேற்றனர். இந்தியாவுக்கான சீனத் தூதர் லேயூச்சேன் இதன் துவக்க விழாவில் கலந்து கொண்டார்.

மேலும், இக்கண்காட்சி சீனப் பொது தூதாண்மைச் சங்கம் நடத்திய சீனப் பண்பாட்டின் தெற்காசியப் பயணம் என்ற நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். இப்பயணத்தில் சீனாவின் தலைசிறந்த கலைஞர்கள் இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் கலைக் கண்காட்சிகளையும், பண்பாட்டு ஒத்துழைப்புக் கருத்தரங்கு, கடல் பட்டுப்பாதையின் கட்டுமானக் கருத்தரங்கு முதலிய நடவடிக்கைகளையும் நடத்துகின்றனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040