2 நாட்கள் நீடிக்கும் மண்டலம் மற்றும் பாதையைக் கூட்டாகக் கட்டியமைக்கும் திட்டம் பற்றிய சர்வதேச ஆய்வுக் கூட்டம் மார்ச் 26ஆம் நாள் தில்லியில் துவங்கியுள்ளது. இந்தியாவிலுள்ள சீனத் தூதரகமும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சீன மற்றும் தெற்கிழக்கு ஆய்வு மையமும் இக்கூட்டத்தைக் கூட்டாக நடத்தின. இந்தியாவுக்கான தூதர் லே யூ செங், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வேந்தர் பிரசென்ஜிட சென் முதலியோர் துவக்க விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.