யேமன் விமான நிலையத்தை நொறுக்கி, யேமன் உரிமை வான் பரப்பைக் கட்டுப்படுத்தியதை அடுத்து, செளதி அரேபியப் படை, யேமனின் அனைத்து துறைமுகங்களையும் கட்டுப்படுத்தியுள்ளது. யேமன் ஷியட் பிரிவைச் சேர்ந்த அல் ஹெளதி ஆயுத அமைப்பு கடல் வழி மூலம் ஆயுதங்களையும் ஆயுததாரிகளையும் அனுப்பாமல் தடுப்பது இந்நடவடிக்கையின் இலக்காகும் என்று செளதி அரேப்பிய ராணுவ வட்டாரத்தின் செய்தித்தொடர்பாளர் 30ஆம் நாள் தெரிவித்தார்.
செளதி அரேபியா ஆகிய நாடுகளின் போர் விமானங்கள் 30ஆம் நாள் விடியற்காலை யேமனிலுள்ள அல் ஹெளதி ஆயுத அமைப்பு மீது வான் தாக்குதல் நடத்திய போது, யேமன் வட மேற்கு பகுதியிலுள்ள ஹாச்சஹ் மாநிலத்திலுள்ள அகதி முகாம் ஒன்று மீது தவறாக வெடி கொண்டு வீசப்பட்டது. இதில் குறைந்தது 40 பேர் உயிரிழந்தனர். 250க்கு அதிகமானோர் காயமுற்றனர்.