ஐ.எஸ் அமைப்பைப் பிரதிநிதியாகக் கொண்ட பயங்கரவாதக் குழுக்களை ஒடுக்கும் பணியால் ஈடுபட்டு வரும் ஈராக்குக்குச் சர்வதேசச் சமூகம் ஆதரவு அளிக்கிறது என்று ஈராக் அரசுத் தலைவர் முஹம்மது புவாட் மசூமுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது பான் கிமூன் தெரிவித்தார். ஈராக் அரசு அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இதைத் தெரிவித்தது.
பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் ஈராக் ஊன்றி நிற்கும். அத்துடன், தேசிய நல்லிணக்கத்தை ஈராக் அரசு தொடர்ந்து முன்னேற்றி, பல்வேறு பிரதேசங்கள் மற்றும் குழுக்களின் நலன்களைப் பேணிக்காக்கும் என்று முஹம்மது புவாட் மசூம் தெரிவித்தார்.