வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சீனாவின் ஸின்ஹுவா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ஏமனில் 120 இலங்கை குடிமக்கள் உள்ளனர். இந்திய குடிமக்களை மீட்க, இந்திய அரசு கப்பலை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
ஏமனில் இலங்கைக்கு தூதர்கள்ள் இல்லாத காரணத்தால், இலங்கை மக்களுக்கு உதவி அளிக்கும் பொருட்டு, சானாவில் உள்ள இந்திய தூதரகத்தை நாங்கள் தொடர்பு கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.
மேலும், ஓமனில் உள்ள இலங்கை தூதரகம், ஏமனில் உள்ளவர்களை பத்திரமாக மீட்கும் பொறுப்பில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.