மேலும், 1,500 பேர் பயணிக்கக் கூடிய வகையிலான கப்பலையும் ஏமன் நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையும் இந்திய அரசு எடுத்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சுட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
ஏமனில் சுமார் 3,500 இந்தியர்கள் பணி புரிந்து வருகின்றனர். அவர்களில் அதிகமானோர் செவிலியர்கள் ஆவர்.
ஏமனில் அதிபர் அப்தரப்போ மன்சூர் ஹாதி அரசை மீண்டும் கொண்டு வரும் நடவடிக்கையில் சௌதி அரேபியா தலைமையிலான ராணுவப் படை, ஹுதி போராட்டக்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்காரணமாக, அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும், தங்களது குடிமக்களை சொந்த நாட்டுக்கு பத்திரமாக அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றன.