சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக் கடமையை ஐ.நா பேணிகாத்து செயல்படுத்துவதற்கு, அமைதி ஆக்கப்பணியானது முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஐ.நாவிலுள்ள சீனத் துணை நிரந்தரப் பிரதிநிதி வாங் மின் ஏப்ரல் 16-ஆம் நாள் தெரிவித்தார்.
69ஆவது ஐ.நா.பேரவை நடத்திய முழு அமர்வில், ஐ.நாவின் அமைதி ஆக்கப்பணி ஆணையம், அமைதி ஆக்கப்பணி நிதியம் ஆகியவை தொடர்பான அறிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டன.
கடந்த ஆண்டின் இறுதியில், 69ஆவது ஐ.நா.பேரவையும் ஐ.நா.பாதுகாப்பவையும், அமைதி ஆக்கப்பணி முறைமைக்கான பரிசீலனைப் போக்கை கூட்டாக துவக்கின என்று வாங் மின் கூறினார். மேலும், ஐ.நாவின் இதர உறுப்பு நாடுகளுடன் இணைந்து, ஆக்கப்பூர்வமாக இப்பரிசீலனைப் போக்கில் பங்கெடுக்க வேண்டும் என்றும், இப்பரிசீலனை ஆக்கப்பூர்வ பயன்களைப் பெறுவதை சீனா எதிர்பார்ப்பதாகவும் வாங் மின் கூறினார்.