அமெரிக்காவுக்கான சீனத் தூதர் சுவேய் தியன் கெய் 16ஆம் நாள் வாஷிங்டனில் சீன-அமெரிக்க சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்புக் கருத்தரங்கில் கலந்து கொண்டு, முக்கிய உரை நிகழ்த்தி, தென் சீனக் கடல் பிரச்சினை பற்றி சீனாவின் நிலைப்பாட்டை விவரித்தார். தென் சீனக் கடல் பரப்பு ஆற்றல் ஆக்கப்பணியை சீனா வலுப்படுத்துவது, இக்கடல் பரப்பின் பாதுகாப்பு, நிதானம் மற்றும் கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தைப் பேணிகாப்பதற்குத் துணை புரியும் என்று அவர் தெரிவித்தார்.
தூதாண்மை பேச்சுவார்த்தை மூலம் தென் சீனக் கடல் சர்ச்சையைத் தீர்க்க சீனா பாடுபட்டு வருகின்றது என்றும், சீனாவும், ஆசியான் நாடுகளும் இப்பிரதேசத்தின் செழுமை மற்றும் நிதானத்தைப் பேணிகாப்பதில் பரந்துபட்ட பொது நலன்களைக் கொண்டுள்ளன என்றும் சுவேய் தியன் கெய் வலியுறுத்தினார்.