அமெரிக்காவுக்கான சீனத் தூதர் சுவேய் தியன் கெய் 16ஆம் நாள் வாஷிங்டனில் சீன-அமெரிக்க சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்புக் கருத்தரங்கில் கலந்து கொண்டு, முக்கிய உரை நிகழ்த்தினார். சீனாவும் அமெரிக்காவும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, உலகப் பாதுகாப்பு அறைகூவலைச் சமாளிக்க வேண்டும் என்று அவர் தன் உரையில் விருப்பம் தெரிவித்தார்.
அமைதி வளர்ச்சிப் பாதையில் சீனா தொடர்ந்து முன்னேறி, சுதந்திர அமைதி தூதாண்மைக் கொள்கையைப் பின்பற்றும். அமெரிக்காவுடன் ஒன்றுக்கொன்று மதிப்பு அளித்து, கூட்டாக வெற்றி பெறும் புதிய ரக வல்லரசு உறவை உருவாக்க சீனா பாடுபட்டு வருகிறது. இதற்காக அமெரிக்கா சீனாவுடன் இணைந்து கூட்டாகப் பாடுபட வேண்டும் என சீனா விரும்புவதாக சுவேய் தியன் கெய் சுட்டிக்காட்டினார்.