• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நியுசிலாந்தில் கண்காணிப்பு மீது சீனத் தூதரகத்தின் கவனம்
  2015-04-19 17:40:45  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்காவின் ஃப்ரிஸம் சம்பவத்தின் ரகசியத்தை வெளிப்படுத்திய எட்வார்ட் ஜோசெப் ஸ்னோடென் வழங்கிய உச்ச நிலை ரகசிய ஆவணம் ஒன்று 19ஆம் நாள் நியுசிலாந்தின் தெ ஹெரால்ட் எனும் செய்தியேட்டில் வெளியிடப்பட்டது. நியுசிலாந்தின் உளவு நிறுவனங்கள் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு பணியகத்துடன் ஒத்துழைத்து, நியுசிலாந்தின் முதலாவது பெரிய நகரான ஆக்லண்டிலுள்ள சீனத் தூதாண்மை நிறுவனங்களின் தகவல் இணைப்புகளைக் கண்காணித்து வருகின்றன என்று இந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டது.

நியுசிலாந்திலுள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் சின்ஹுவா செய்தி நிறுவனத்தின் செய்தியாளரிடம் பேசுகையில், இணைய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் சீனா தனது பாதுகாப்பு நலன்களை உறுதியாகப் பேணிக்காக்கும் என்று கூறினார்.

இதனிடையில், நியுசிலாந்தின் தலைமை அமைச்சர் பணியகம் கூறுகையில், ஸ்னோடனிடமிருந்து வந்ததாக கூறப்பட்ட ஆவணங்களுக்கு மறுமொழியளிக்க போவதில்லை என்று தெரிவித்தது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040